
சிறைச்சாலைகளில் நிறம்பி வழியும் கைதிகள் : உறங்கும் நேரத்திலும் மாற்றம்
நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,000 என்ற போதிலும் தற்போது 29,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை சுமார் பதினெட்டாயிரத்தால் அதிகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் காரணமாக கைதிகள் பலர் மாறி மாறி உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில்,
இந்த கடுமையான நிலைக்கு மாற்றாக கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள சில கைதிகள் ஹொரணை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பூசா கைதிகள் பல்லசேன முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
