மன்னாரில் அடை மழை

-மன்னார் நிருபர்-

மன்னார் தீவகப் பகுதிக்குள் நீண்ட வெப்ப காலநிலை நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நண்பகல் கடுமையான மழை பொழிந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நிலவி வந்த அதி உஷ்ணமான கால நிலை காரணமாக அதிகளவான வெப்பம் மற்றும் வறட்சி மன்னார் மாவட்டத்தில் நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் கடும் மழை பெய்துள்ளது.

குறுகிய நேர மழை பெய்த போதிலும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்