திருகோணமலையில் காபட் பாதை வீதி அபிவிருத்தி

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 75 மில்லியன் ரூபா செலவில் 3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட காபட் இடும் பணி இடம்பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் இப் பாதை அபிவிருத்தி பணி இடம்பெற்றது. இதில் மூர் வீதி, வித்தியாலயம் வீதி வித்தியாலயம் ஒழுங்கை கல்லூரி வீதி, சாரதா வீதி, அவ்வையார் வீதி உட்பட ஒவ்வொரு வீதியும் தலா ஒரு கிலோ மீற்றர் வரை மொத்தமாக 3 கிலோ மீற்றர் தூரம் வரை காபட் இடும் பணி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான வீதி அபிவிருத்தி வீதிகள் கொரியா, சீனா போன்ற நாடுகளின் கம்பெனிகளாலே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது இன்று முதல் தடவையாக திருகோணமலையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினால் இந்த பாதையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிகாட்டதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்