படகுகள் மோதுண்டு விபத்து: 7 பேர் காயம்
கிளிநொச்சியில் இரண்டு படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி – பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. குறித்த திருவிழாவுக்கு சென்ற இரண்டு படகுகளே மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த 7 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்