
கோவிட்-19 வைரஸை விட 20 மடங்கு ஆபத்தான வைரஸ்
கோவிட்-19 வைரஸை விட 20 மடங்கு ஆபத்தான வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரேயஸ் தனது எக்ஸ் கணக்கில் இந்த தொற்றுநோய்க்கு ‘டிசீஸ் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்று குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
‘டிசீஸ் எக்ஸ்’ நோயைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ‘தொற்றுநோய் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டார்.
எதிர்வரும் மே மாதத்திற்குள் இந்த உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். COVID-ன் போது நிலைமையை நிர்வகிக்க முடியாததால் பலர் உயிர் இழந்தனர் என்று அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
