ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் உத்தியோகஸ்தரின் மகன் கைது

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று சனிக்கிழமை இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா- மாஞ்சோலை வீதியில் வசித்துவரும் ஹதரஸ்கொடுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் சார்ஜனின் 24 வயதுடைய மகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த இளைஞரை பைசல்நகர் பிரதான வீதியில் வைத்து சோதனையிட்ட போது அவரிடமிருந்து 05 கிரேம் 400 மில்லிகிரேம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்யும்போது குறித்த இடத்தில் இருந்து தப்பி ஓடியவர் எனவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்