சிறுவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து சிறுவர்களிடையே நோய் நிலைமை அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு வயிற்று போக்கு, டெங்கு மற்றும் எலி காய்ச்சல் போன்ற நோய் நிலைமை ஏற்படக் கூடிய வாய்ப்பு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறுவர்களுக்கு 3 நாட்களுக்கு மேல் நோய் நிலைமை தொடருமாயின் உடனடியாக வைத்தியர் ஒருவரை தொடர் கொள்ளுமாறும் அவர்  தெரிவித்துள்ளார்.