கொள்ளுப்பிட்டி விபத்து தொடர்பில் வெளியான தகவல்

கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 40 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன தெரிவித்தார்.

எனினும், இந்த மரத்தை அகற்ற வேண்டும் என எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்த மரங்கள் மேலும் சில பகுதிகளில் உள்ளன, குறித்த மரங்களின் தன்மை தொடர்பில், ஆராய்ந்து அதனை அகற்றுவது தொடர்பில், எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்