கள்ளக்காதலனின் தலையை வெட்டி மனைவியிடம் கொடுத்த கணவன்
இந்தியா – தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் இளைஞரின் தலையை துண்டாக வெட்டி மனைவியிடம் தலையை காட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்த குண்டன் என்ற சுப்பிரமணியன் மகன் வேலுச்சாமி வயது 32 இவரின் மனைவி இசக்கியம்மாள் ஆகிய இருவரும் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் முருகன் வயது 41 என்பவருக்கும் இசக்கியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார் ஆனால் அதை மனைவி ஏற்காத நிலையில் இருவருக்கும் இடையிலான கள்ளக்காதல் தொடர்ந்தாக கூறப்படுகிறது. அத்தோடு மனைவி சொந்த ஊரில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கண்ணாடிகுளம் கிராமத்தில் இருந்து ருக்குமணியம்மாள்புரம் செல்லும் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கள்ளக்காதலனிடம் கணவன் சென்று என் மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த இளநீர்வெட்டும் அருவாளை எடுத்து கள்ளக்காதலனின் தலையை திருவிழாக்களில் ஆடை வெட்டுவது போல ஒரே வெட்டாக தலையை வெட்டியாதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதலனின் தலையை எடுத்து மனைவி ஊருக்கு இருசக்கர வாகனத்திலேயே தலையை கொண்டு சென்று மனைவியிடம் உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு பொலிஸார் கணவனை கைது செய்து கள்ளக்காதலனின் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலைச் சம்பவம் தென்காசி மாவட்டம் ஊத்துமலை பொலிஸ் எல்லைக்கு உட்பட்டதால் பொலிஸார் குற்றவாளியான வேலுச்சாமியை கைது செய்து இந்திய தண்டனைச் சட்டம் 294(B),302,506 (ii),ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியிடம் கள்ள உறவு வைத்திருந்த ஒருவரை கொலை வெறி தாக்குதலோடு கொடூரமாக தலையை வெட்டிய சம்பவம் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்