
மட்டு நகர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கவலைக்குரிய செயற்பாடுகள்
மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் பயணிகள் உணவுகளை உண்டு விட்டு எஞ்சிய உணவையும் உணவு பொதி செய்யப்பட்டுள்ள கடதாசி மற்றும் பொலித்தீன் பொதிகளை பேருந்தில் இருந்தவாறே அலட்சியமான முறையில் கீழே வீசுகின்றனர்.
குறித்த பேருந்து நிலையத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருப்பதுடன் மாணகர சபை ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் மக்களின் கவலையீன போக்கும் தவறான நடவடிக்கைகளும் எமது பிரதேசத்தை முன்னோக்கி நகர்த்தி செல்வதில் தடையாக அமைவது கவலைக்குரிய விடயமாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



