ஏ9 வீதியில் இளம் தம்பதி விபத்து : கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு (வீடியோ)

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம்  ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளும்,  பொலிஸாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.

நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இன்று சனிக்கிழமை மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது,  பொலிஸாரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.

இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புவனேஸ்வரன் மனோஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.