ரயில் முன் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற  சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி ( வயது 28 ) எனும்  யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்