அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
வத்தளை பல்லியவத்தை பாலத்திற்கு அருகில் உள்ள ஹெமில்டன் கால்வாயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் பழுப்பு நிற சாரம் மற்றும் வெள்ளை நிற கை நீண்ட சட்டை அணிந்துள்ளதாகவும் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்