
மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள்
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் வழிகாட்டல்களை சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி பாடசாலை நடவடிக்கைகளின் போது, வெப்பமான நாட்களில் மாணவர்கள் வெளிப்புற அல்லது விளையாட்டு மைதானத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் இடைவேளையின் போது மாணவர்கள் வெளியில் நேரத்தை செலவிடுவதையும் விளையாட்டுகளை விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும், தண்ணீர் அருந்துவதும், களைப்பைப் போக்க இரண்டு குறுகிய கால இடைவேளையை எடுத்துக் கொள்வதும் சிறந்தது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை பாடசாலையை விட்டு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்றும், அதிக வெப்பம் உள்ள நாட்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்