
கிண்ணியாவில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை
-கிண்ணியா நிருபர்-
புனித நோன்பு பெருநாளான இன்று சனிக்கிழமை திடல் தொழுகையானது கிண்ணியா குறிஞ்சாக்கேனி VC மைதானத்தில் இடம்பெற்றது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் சமாதானம் அன்பு பரஸ்பரத்தை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வெந்நிற புறாக்களும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்டு பறக்கவிட்டார்.
அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் கிண்ணியா கிளை ஏற்பாடு செய்த பிரதான திடல் தொழுகை கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.
உரையினை அதன் தலைவர் நஸார் மௌலவி உரை நிகழ்த்தினார்.
தொழுகையின் பின் ஒருவரையொருவர் முஸாபஹா செய்து கொண்டனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

