
பாடசாலை முதலாம் தவணை ஆரம்பம்
பாடசாலை முதலாம் தவணை ஆரம்பம்
2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அதன்படி, பாடசாலைகள் மீண்டும் ஏப்ரல் 17ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மே 12 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்காக மே 13 ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மே 25ம் திகதி ஆரம்பமாகிறது.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி வரை நடைப்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்