Last updated on April 28th, 2023 at 05:12 pm

புலமை பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு

புலமை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான கௌரவிப்பு

-ஆர்.நிரோசன்-

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிகாட்டிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை காலை 09:30 மணியளவில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கலந்துகொண்டார்.

நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண ஆரம்பக் கல்வி  உதவிக் கல்விப் பணிப்பாளர் தி.பார்த்திபன் மற்றும் மட்டக்களப்பு இலங்கை வங்கியின் முகாமையாளர் தாக்ஷாயினி பவன்,   உதவி கல்வி பணிப்பாளர் க.ஹரிஹரராஜ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிட்சையின் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மண்முனை வடக்கு வலயத்தில் அதி கூடிய 183 புள்ளிகளை பெற்ற மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர மகளிர் பாடசாலையின் மாணவி கிருஷாயி பவேந்திரன்,  மண்முனைப்பற்று வலயத்தில் அதிகூடிய 176 புள்ளிகளை பெற்ற மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் மாணவி வேனுகுமரன் தஜானா,  ஏறாவூர்ப்பற்று வலயத்தில் அதிகூடிய 168 புள்ளிகளை பெற்ற மட்டக்களப்பு குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவி விஜயகுமார் சாம்பவி உட்பட மூன்று மாணவிகளுக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மொத்தமாக 381 மாணவர்கள் புலமை பரீட்சையில் சித்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்தி அடைந்த அனைவருக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

 

புலமை பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு

புலமை பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு புலமை பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்