வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய விற்பனை விதியை அடுத்த வாரம் முதல் முழுமையாக நீக்குவதுடன், கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தடையை முழுமையாக நீக்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை ஒரு வழிகாட்டல் தடையை அடுத்த வாரத்திலிருந்து முடிவுக்கு கொண்டுவரும் என்றும் மேலும் ரூபாயை சுதந்திரமாக வர்த்தகம் செய்ய அனுமதிக்கும், ஆனால் இருப்புக்களை உருவாக்க டாலர்களை வாங்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
