இந்திய அகதி முகாமில் பூத்த “இலங்கை சிறுவர் காதல்” மைனர் குஞ்சு போக்சோ சட்டத்தின் கீழ் கைது

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது, உயிர்பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டில் இலங்கையர்கள் ஏராளமானோர் அகதிகள் முகாம்களிலும் தங்கி வருகிறார்கள்.

இந்தவகையில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ளது போகநல்லூர் என்ற பகுதியில் இலங்கை வாழ் தமிழர்கள் அகதிகள் முகாம் உள்ளது.

இந்த முகாமை சேர்ந்த 15 வயதான சிறுமியை, ராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள 17 வயதான சிறுவன் காதலித்து வந்துள்ளான்.

இறுதியில் வீட்டுக்கு தெரியாமல் இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர். இதனிடையே, முகாமில் தங்கியிருந்த சிறுவனை திடீரென காணவில்லை என்பதால், அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைநதுள்ளனர்.

சிறுவனுக்கு ஏதாவது ஆபத்துக்கள் வந்திருக்கலாம் என்று பயந்துபோன குடும்பத்தினர், க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் இதன் அடிப்படையில், மண்டபம் பொலிசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுவனையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன 17 வயது சிறுவன், தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பொலிஸ் நிலையத்திற்குள் 15 சிறுமியுடன் சென்று தாங்கள் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அதற்காகவே தஞ்சம் அடைந்துள்ளோம் என்று சொல்லி பொலிசாரை அதிர வைத்துள்ளனர்.

இருவரது பெற்றோர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு வர வைத்ததுடன் இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் மீது குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில், 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

பாதுகாப்பு கோரி பொலிஸ் நிலையத்தில் தஞ்சடைந்த சிறுவர் தம்பதியினருக்கும் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.