வேலை பெற்று தருவதாக பண மோசடி செய்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் வேட்பாளர் கைது
தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலங்கையர்களை சுற்றுலா விசாவில் லாவோஸுக்கு அழைத்துச் சென்று பண மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட அம்பலாந்தோட்டை – நோனாகமப் பகுதியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட உள்ளதாகவும், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் படை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், 19 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நேற்று திங்கட்கிழமை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.