
6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆறு மாவட்டங்களுக்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று திங்கட்கிழமை முதலாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.