50 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்-

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, வெருகல் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வெருகல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சோ.சௌமியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் சிறிகாந்தராசா காளிப்பிள்ளை ,வெருகல் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இவ் உலருணவுப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக சீன அரசாங்கத்தினால் இவ் உலருணவுப் பொதிகள் அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்