4 நிமிடங்கள் இருளில் மூழ்கும் நாடு

சூரியனின் ஒளியை சந்திரன் தடுப்பதால், இன்று திங்கட்கிழமை வட அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பகல் நேரத்தில் நான்கு நிமிடங்கள் மொத்த இருளை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக குறுகிய காலத்தில் ஏற்படும் இந்த நிகழ்வு குறித்து அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வது கடினமான விடயம் என விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் கிரகணத்தின் பாதையில் விண்கலங்களை ஏவுவார்கள், மிருக காட்சி சாலைகளில் மிருகங்களின் செயல்பாடுகளை அவதானிப்பார்கள், என்பதுடன் பாரிய தொலைநோக்கிகள், கெமராக்கள் மூலம் அண்ட வெளியினை கூர்ந்து நோக்குவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்