4 நாட்களாக சிறுவன் மாயம்: கண்டுபிடிக்க பொதுமக்களிடம் கோரிக்கை

-வவுனியா நிருபர்-

வவுனியா பொன்னாவரசங்குளம் பிரதான வீதியை சேர்ந்த 16 வயதுடைய லிங்கேஸ்வரன் தருஜன் எனும் சிறுவனை கடந்த 4 நாட்களாக காணவில்லை என பெற்றோரால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டில் தொடர்ச்சியாக தொலைபேசியை உபயோகித்ததை அவதானித்த தாயார் கண்டித்திருந்தார் என்றும், அதனை தொடர்ந்து சிறுவன் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவனை யாரேனும் அடையாளம் கண்டால் உடனடியாக 0773751064 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.