2வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் தவறி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்  கட்டடமொன்றில் வேலை செய்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் இளவாலை – பெரியவிளான் பகுதியை சேர்ந்த சூசை சுதர்சன் (வயது 38) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கட்டடமொன்றின் 2வது மாடியில் வேலை செய்துகொண்டிருந்தவேளை தவறி கீழே விழுந்துள்ளார்,  இதன்போது அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அறிக்கையில் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.