2ஆம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் நேற்று புதன் கிழமை ஆசிரியர் தாக்கியதில் 2 ஆம் தரத்தில் கல்வி பயிலும், மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனுக்கு உயிரெழுத்துக்கள் தெரியாத காரணத்தினால் ஆசிரியர் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தலை மற்றும் கண்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.