
வரலாற்றுச் சிறப்புமிக்க சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய இரதோற்சவம்
ஈழத்து புகழ் பூத்த யாழ். தென்மராட்சி வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய தேர் திருவிழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
வருடாந்த மகோற்சவத்தின் 14 நாள் திருவிழாவில் நேற்றைய தினம் 12 ஆம் திருவிழாவான தேர்த் திருவிழாவா இடம்பெற்றது.
இதன்போது தேரேறி வந்து அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் தூத்துக்காவடி, பறவைக்காவடி, பாற்குடம் மற்றும் கற்பூரசட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்