
15 வயது கர்ப்பிணி சிறுமியை உயிருடன் எரித்த 17 வயது சிறுவன்
பிரான்சில் 15 வயது கர்ப்பிணி சிறுமியை கத்தியால் குத்தி உயிருடன் எரித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நபர் நேற்று திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஷைனா (வயது – 15) என்னும் மேல்நிலைப் பள்ளி மாணவியை, அப்போது 17 வயது சிறுவனாக இருந்த நபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஷைனாவைக் கொன்று அவரது உடலை எரிக்கும் நோக்கத்துடன் பாரிஸின் வடக்கே அமைந்துள்ள க்ரீல் நகரத்தில் உள்ள ஒரு கொட்டகைக்கு இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த நிலையில், ஷைனாவின் எச்சங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனை தடயவியல் பரிசோதனையில் ஷைனா பல கத்திக் காயங்களுக்கு ஆளாகியிருந்ததும், தீப்பிடித்தபோதும் உயிருடன் இருந்ததும் தெரியவந்தது. அவர் கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள், குடும்ப விருந்துக்குப் பிறகு வெளியே சென்றிருந்தார், அவருடைய கைப்பையில் ஒரு நேர்மறையான கர்ப்ப பரிசோதனை உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்த ஷைனா, புதிதாக கர்ப்பம் தரிக்கத் தொடங்கியிருக்கலாம் என்று விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர் முன்பே ஒருமுறை குற்றம் சாட்டப்பட்டவரால் கற்பமானதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது 20 வயதைக் கடந்துவிட்ட அவர் தனது குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து, தான் குற்றமற்றவர் என்று கூறுகிறார். அவரது வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சார்பாக விடுதலையை கோருவதாகக் கூறினார்.
ஷைனாவின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், நெகர் ஹேரி, நீதியைப் பெறுவதற்கும், உண்மை வெளிச்சத்திற்கு வருவதை உறுதிசெய்வதற்கும் வலியுறுத்தினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
