12 வயது சிறுமியை காதலிக்க வீட்டுக்கு வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

நுவரெலியா ஹட்டன் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு சென்று தன்னை இரகசிய பொலிஸாரென்று குறிப்பிட்டு, வீட்டிலிருந்த 12 வயது சிறுமியை விசாரணை செய்யப் போவதாக குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திம்புலபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கான்ஸ்டபிள் வீட்டிற்கு வந்து விசாரணைக்காக சிறுமியை அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். இதன் போது குடும்பத்தினர் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து வீட்டுக்கு வந்த பொலிஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த சிறுமியை காதலிக்கும் நோக்கில் தான் வீட்டிற்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், இரகசியப் பொலிஸாரால் விசாரிக்கப்படும் அளவுக்கு இந்த குடியிருப்பாளர்களிடம் குற்றச் சாட்டு எதுவும் இல்லை என்பதை அறிந்த ஹட்டன் பொலிஸார், இந்த கான்ஸ்டபிள் சிறுமியை விசாரிப்பதாக குறிப்பிட்டு, அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கின்றனர்.

மேலும் இது தொடரிபிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்