11 வயது மகள் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை

 

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸாரால் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டவருக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 6 இலட்சம் ரூபா நட்டஈடும், 8 000 ரூபா அபராதமும்  விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, ​​தனது தந்தை மதுபோதையில் வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூறியுள்ளார்.

சந்தேகநபரான தந்தை 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்