
வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு
வைத்தியசாலை பணிகளுக்கு உதவுவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அசௌகரியங்களை தவிர்க்க இராணுவத்தினரை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டு மேல், கிழக்கு, மத்திய மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தளபதிகளின் மேற்பார்வையில், கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டி, மஹமோதர, பேராதனை, அநுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகளுக்கு இராணுவத்தினர் வரவழக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாத்தறை, பலாங்கொடை, எஹலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை , மீரிகம, ஹோமாகம, கேகாலை உட்பட 26 வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை இடையூறு இன்றி தொடர்வதற்காக படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
