
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல்: இருவர் கைது
மொரகஹஹேன நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றினுள் உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சகோதரர்கள் என்பதுடன் இவர்களில் இராணுவ கமாண்டோ சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் தாக்க பயன்படுத்திய வாள் மற்றும் இரும்புக் கம்பி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்