விளையாட்டு கழக மைதானத்தில் 6 இலட்சம் பெறுமதியான வயர்கள் திருட்டு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த ரூபா 6 இலட்சம் பெரெஉமதியான மின் வயர்கள் திருடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் யாழ்ப்பாண மாவட்ட ரீதியில் றேஞ்சஸ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகளை மின்னொளியில் நடாத்திவருகிறது. அது தற்போது அரையிறுதி போட்டி வரை வந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் வாரமளவில் இறுதிப் போட்டியை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் மின்னொளிக்காக பொருத்தப்பட்டிருந்த வயர்ககளவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

களவாடப்பட்டுள்ள வயர்களின் தற்போதைய சந்தை பெறுமதி சுமார் 6 லட்சம் ரூபா எனவும் றேஞ்சஸ் கழகத்தினர் தெரிவிக்கின்ரன்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்