வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகள்

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது இன்று திங்கட்கிழமை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானம் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 4 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் ஒன்றரை இலட்சம் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம், குழாய்கள் மற்றும் தூவல் நீர் பாசனக் கருவிகளை இம்மாதத்தில் இரண்டாவது முறையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவற்றை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் திருகோணமலையில் வைத்து வழங்கி வைத்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்