வாடகை வீட்டில் வசித்த பெண் சடலமாக மீட்பு

கொழும்பு – பிலியந்தலை பொலிஸ் பிரிவின் பெலென்னாவத்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் நேற்று வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பொலஸ் நிலையத்தில் இருந்து கிடைத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உயிர் இழந்த பெண் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.