வாகன விபத்து: 30 பேர் படுகாயம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி ஏற்பட்ட வாகன விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜஸ்தான் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.