வாகன விபத்து ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் மரணம்

அநுராதபுரம் இராஜாங்கனையில் கார் ஒன்றும், ஹயஸ் ரக வான் ஒன்றும் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர்.

விபத்தின் போது காரைச் செலுத்திச் சென்ற 67 வயதான வயோதிபரும்இ காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற ஐந்து வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற, விபத்தில் மரணமடைந்த ஐந்து வயது சிறுமியின் தந்தை (வயது – 35), தாய் (வயது – 32) ஆகியோரும், ஹயஸ் வாகனத்தின் சாரதியான 28 வயது இளைஞரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்