வவுனியாவில் பல்கலைக்கழக போதனாசிரியர் செய்த அருவருப்பான செயல்!

-வவுனியா நிருபர்-

வவுனியாவில் அரச ஊழியரான இளம் யுவதி ஒருவர் தங்கியிருக்கும் தனியார் வாடகை வீட்டில் குளிப்பதை தொலைபேசியில் வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சில யுவதிகளுடன் இணைந்து தங்கியிருந்த வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் போதானாசியராக பணியாற்றும் ஒருவரே இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபர் குழு வகுப்புக்கள் நடாத்தி வருகின்ற நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் கற்பித்துக் கொண்டிருந்த போது யுவதி குளியலறைக்குள் சென்று குளித்துள்ளார்.

இதன்போது குளியலறைப் பக்கம் சென்ற போதானாசிரியர் குளியறையின் மேல் துவாரத்தின் ஊடாக கைத்தொலைபேசியை உயர்த்தி வீடியோ எடுக்க முயன்றுள்ளதுடன், அதன் பின் குளியலறையின் மறுபக்கம் தவன்று சென்றுள்ளார்.

இந்நிலையில் யுவதி சத்தம் கேட்டு வெளியில் இருந்த சக யுவதிகளை அழைத்த போது குறித்த போதானாசிரியர் குனிந்து ஓடியபடி வெளியேறிய காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசீரீவியில் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்