வழக்கில் பிணையில் வந்தவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த ஜோன் பிரகாஸ் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் விநாயகபுரம் பகுதியில் கடந்த 31.12.2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸார் இது கொலையா அல்லது தற்கொலை என விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்