
வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள்
யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இடம் பெற்றது.
முன்னாதாக காலை 5 மணியளவில் விசேட ஹோம பூசைகள் இடம்பெற்று, 6:30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றது. அதனைத்தொடரந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் உள்வீதி வலம் வந்து 8 மணியளவில் பொங்கல் இடம்பெற்றது.
இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்