வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்

கடந்த ஜுலை மாதம் 30 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ்விழா,  எதிர்வரும் 19 ம் திகதி தீர்த்தோற்சவதுடன் நிறைவுபெற உள்ளது.
வரலாற்று தொன்மையும், புராதன ஆலயங்களுள் முக்கியமான ஆலயமாகவும், சின்னக்கதிர்காமம் என்று அழைக்கப்படும் ஆலயமாகவும் இவ் ஆலயம் காணப்படுகிறது.
வாய் கட்டி பூஜை செய்யும் ஆலயங்களுள் இதுவே பிரதான ஆலயமாக விளங்குகிறது.
இதில் பூசையினை நிகழ்த்துவோரை கப்புறாளை என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்