வடபகுதி கடலில் ஒரே இரவில் 35 பேர் கைது

வட பகுதி கடலில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோத பயணம் என்பன தொடர்பில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாககடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது 3 இந்திய படகுகள் உள்ளிட்ட நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் அதற்குள் குறித்த சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் வர்த்தகர் உள்ளிட்ட குழுவினர் உள்ளடங்குகின்றனரா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் .