வடக்கு, கிழக்கில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது .
இன்று நண்பகல் வரை மாத்திரம் நிர்வாக முடக்கலை முன்னெடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் .
பல தரப்பினரிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த நிர்வாக முடக்கலுக்கு சில அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பல அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதேவேளை நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கான அழைப்புக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.