ரிட்ஸ்-கார்ல்டன் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

ரிட்ஸ்-கார்ல்டன் நிறுவனத்துக்கு சொந்தமான பிரமாண்டமான சொகுசுக் கப்பல் , 400 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இன்று ( 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அனர்த்தத்தின் பின்னரான சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார் .

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் பல உயரதிகாரிகள் கப்பலை வரவேற்றனர் .

கப்பல் வருகையைக் கொண்டாடும் வகையில் ஒரு சம்பிரதாயபூர்வமான நினைவு பரிசுப் பரிமாற்ற நிகழ்வும் நடைபெற்றது.

இரண்டு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் ரிட்ஸ்-கார்ல்டன் கப்பல், நாளை காலி துறைமுகத்துக்கு செல்லவுள்ளது.

இத்தகைய உயர்மட்ட சொகுசுக் கப்பலின் வருகை, உலக அரங்கில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் மீதான நம்பிக்கையையும் கவர்ச்சியையும் மீள நிலைநிறுத்த உதவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்