ரயில் மோதி 15 வயது சிறுமி பலி

மாத்தறை பம்புரன பகுதியில் மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹீன்தெடிய பென்தொடகேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹீன்தெடிய தர்மராஜ வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் பயின்றுவந்த 15 வயதான மாணவியொருவரே நேற்று செவ்வாய்கிழமை மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நண்பிகள் மூவருடன், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் தண்டவாளம் வழியாக நடந்துசென்றபோது குறித்த சிறுமி மீது ரயில் மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்