ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

பணியமர்த்தல் உட்பட சேவைச் சிக்கல்களுக்கு தீர்வு கோரி, எதிர்வரும் 24 மணி நேரத்துக்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இது தொடர்பில் தெரிவித்தார்.