ரயில் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் இன்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தன லால் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் ரயில் மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்