யாழ் மருதனார்மடத்தில் விபத்து

-யாழ் நிரபர்-

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இன்று புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளது.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது.

பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

மேலும், விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.