யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 76 ஆவது குடியரசு தின நிகழ்வு

-யாழ் நிருபர்-

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தூதுவரால் இந்திய தேசிய கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி குடியரசு தின வாழ்த்து செய்தியினை வழங்கினார். மேலும் இந்திய தேசபக்திப் பாடல்கள், நடனங்கள் கவிதைகள் என்பன இடம்பெற்றன.

இந்திய தூதர அதிகாரிகள், ஊடகவியாளர்கள், பொஸிஸார், இராணுவத்தினர் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்