யாழில் 107 வயதான தாத்தாவின் இறுதிக் கிரியைகள்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார்.

இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரது இறுதிக் கிரியைகள் நேற்று வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.